> குருத்து: முத்துக்குமாருக்கு மரியாதை செலுத்த செல்கிறோம்!

January 30, 2009

முத்துக்குமாருக்கு மரியாதை செலுத்த செல்கிறோம்!


முத்துக்குமாரின் தியாகத்தால், அவர் எதிர்பார்ப்புப்படி, பல தகவல் தொடர்பு செய்தி நிறுவனங்கள் இருட்டடிப்பை மீறி, தமிழகத்தில் ஈழம் குறித்த போராட்டங்களின் தேக்க நிலை உடைப்பட்டு இருக்கிறது., பல்வேறு அரசியல் தலைவர்களின் சந்தர்ப்பவாத நிலை அம்பலப்பட்டு போயிருக்கிறது.

நேற்று கொளத்தூரில், அந்த பகுதி எம்.எல்.ஏ. முத்துக்குமாரை பார்த்துவிட்டு, மேடையில் நின்று கைகாட்டினானாம். குழுமியிருந்த மாணவர்களும், இளைஞர்களும் அந்த எம்.எல்.ஏ-யையும், பாதுகாப்புக்கு வந்த காவல்துறையையும் ஓட ஓட விரட்டி சாத்தியிருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் பல தரப்பினர் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

முத்துக்குமாரின் அறிக்கை நிதானத்துடன் வாசித்தால், அவர் அனைவரிடனும் எதிர்ப்பார்ப்பது சமூக பொறுப்பைத்தான்.

தான் உண்டு; தான் வேலை உண்டு என்று வாழும் மனித ஜீவராசிகளை சட்டையை பிடித்து உலுக்கி, சுதந்திரத்துக்காக போராடும் படியும், சுதந்திரத்துக்காக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும்படியும் முத்துக்குமார் வேண்டுகிறார்.

நேற்றைக்கு முழுவதும், அறிக்கையில் உள்ள விசயங்கள் தான், முத்துக்குமாரின் குரலில் மனதிற்குள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.

இனி, நெடுங்காலம் முத்துக்குமார் பலருடைய நெஞ்சங்களில் வாழ்ந்து, சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுவதற்கு உரமாய் நினைவில் நிற்பார்.

அந்த போராளியின் முகத்தைப் பார்க்க, இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த இதோ சக தோழர்களுடனும், நண்பர்களுடனும் கிளம்புகிறோம்.

முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கங்கள்!

அவன் புகழ் ஓங்கட்டும்! தமிழகம் விடியலை நோக்கி நகரட்டும்!

0 பின்னூட்டங்கள்: