> குருத்து: என்னை சக மனுசியாக மதித்தார்கள்!

June 17, 2009

என்னை சக மனுசியாக மதித்தார்கள்!

வினவில் வெளிவந்த "பொட்டை" பதிவை ஒரு சிபிஎம் தோழரிடம் பகிர்ந்து கொண்ட பொது, அவர் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

பகுதியில் நடந்த போராட்டத்தில் கைதாகி, கல்யாண மண்டபத்தில் மாலைவரை தங்க வைக்கப்பட்டிருந்தோம். அதில் திருநங்கையும் ஒருவர்.

அவரிடம் பேச்சு கொடுத்தேன். "நீங்கள் எப்படி கட்சிக்கு அறிமுகமானீங்க?"

"என்னுடன் ஒருவன் வாழ்ந்தான். அவனுக்கு நிறைய கடன் இருந்தது. அவனுக்காக என்னிடம் இருந்த பணத்தை கொண்டு பாதிக்கடனை அடைத்தேன். மீதி கடனையும் அடைக்க நானே பொறுப்பேற்று கொண்டேன்.

சில காலம் கழித்ததும், அவனுக்கு திருமணம் முடிக்க அவனுடைய வீட்டில் ஏற்பாடு செய்தார்கள். இவனும் அதற்கு உடன்பட்டான்.

சரி! நீ கல்யாணம் செய். ஆனால், உனக்காக நான் அடைத்த கடனை கூட நீ தரவேண்டாம். மீதி கடனையாவது ஏற்றுக்கொள்! என்பதற்கு மறுத்தான். அவன் சம்பந்தபட்ட நபர்களிடமும், வேறு சிலரிடம் முறையிட்டதற்கு என்னை ஒரு மனுசியாகவே யாரும் மதிக்கவில்லை. பிறகு, இந்த பகுதியில் சிபிஎம் அலுவலகம் போய் முறையிட்டேன். அவர்கள் தலையிட்ட பிறகு இந்த பிரச்சனை முடிந்தது.

இந்த பிரச்சனையில்... தோழர்கள் தான் என்னை சக மனுசியாக மதித்தார்கள். இவர்கள் மத்தியில் தான் இனி இருக்க வேண்டும் என அன்றைக்கே முடிவெடுத்தேன். இப்பொழுது, பகுதி பிரச்சனை எதுவென்றாலும், நானும் கலந்து கொள்கிறேன்" என்றார்

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோதனை