> குருத்து: பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்!

September 16, 2009

பணவீக்கமும் பொருளாதார வீழ்ச்சியும்!


முன்குறிப்பு : மூலதன சூதாடிகளால் உலகம் மிகப்பெரிய பொருளாதார மந்தத்தை சந்தித்திருக்கிறது. வல்லரசு நாடுகளே என்ன செய்வது என்பது தெரியாமல் திரு திரு வென விழிக்கிறார்கள். முதலாளித்துவத்துக்கு மிகப்பெரிய நெருக்கடி இது. இதை தொழிலாளர்கள் தலையில் அப்படியே தலையில் வைக்கிறார்கள். விளைவு - வல்லரசு அமெரிக்காவிலேயே 10% வேலை இழப்பு. மற்ற நாடுகளை பற்றி சொல்லவே வேண்டாம். படு மோசம்.

முதலாளித்துவம் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மூளையை பிசைகிறார்கள். நாம் சொல்கிற தீர்வு - சோசலிசம் தான் மாற்று. அதை விஞ்ஞான பூர்வமாக புரிந்து கொள்ள, பொருளாதாரம் குறித்தான அடிப்படைகளை நாம் கற்க வேண்டும். நாம் ஏற்கனவே சில தலைப்புகளில் இது பற்றி விவாதித்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையும்!

சமீபத்தில் ஒரு தோழர் மூலமாக இந்த கட்டுரை கிடைத்தது. கட்டுரையின் நீளம் கருதி சில பகுதிகளாக தருகிறேன்.

****

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்பது மக்களின் வழக்கு மொழி இதற்கு அர்த்தம் என்னவெனில் பணம் அந்த அள்விற்கு நம்முடைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பது தான்.

பணம் என்பது மனிதர்களுக்கு இடையில் பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒரு கருவி. ஒரு பொருள்.

இது இரண்டு காரியங்களைச் செய்கிறது.

உழைப்புச் சக்தியை வாங்கி பணத்தை தருகிறது.
அப்பணத்தில் உழைப்பவர்கள் தங்களுடைய குடும்பத்திற்குத் தேவையான பொருளாதார தேவைகளுக்குப் பயன்படுத்தி கொள்கின்றனர்.

அப்படியென்றால் பணம் நம்முடைய பொருளாதாரத்தோடு தொடர்புடையது என்பதை மறுக்க முடியாது.

பணமும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்து இருப்பதால் தான் ஒன்று இல்லாமல் ம்ற்றொன்று இருக்க முடியாது என்பது உண்மை, அதனால் தான் ஒன்றையொன்ற் பாதிக்கிறது.

பொருளாதாரம் என்பதை பொருள் + ஆதாரம் என்பார்கள்.


அதாவது, நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான உண்ண உணவு, இருக்க வீடு, உடுக்க உடை போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஆதாரமாக இருப்பதால் தான் இதை பொருளாதாரம் என்கின்றனர். இந்த பொருள்களை வாங்குவதற்கு பணம் மிகவும் அவசியம்.

பொருளாதாரம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்து இருக்கிறதோ அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பும் அதிகரிக்கும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் பொழுது பணத்தின் மதிப்பும் குறையும்.

இதைத்தான் எதுவும் அளவோடு இருந்தால் அது வளர்ச்சி இல்லாவிட்டால் அது வீக்கம் என்கிறோம்.

அப்படியென்றால், பணத்தின் மதிப்பு எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

0 பின்னூட்டங்கள்: