> குருத்து: July 2009

July 31, 2009

காங்கிரசு அரசின் புள்ளி விவர பித்தலாட்டங்கள்!

நன்றி : Lightink

முன்குறிப்பு : பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் காங்கிரசுகார்களிடம் கைமாறிய பிறகு, கடந்த 60 ஆண்டுகளாக பெரும்பான்மையான காலங்களில்... மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி ஆண்டிருக்கிறது.
அவர்களுடைய இந்த 60 ஆண்டு கால சாதனை பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அரிசிக்காக கைஏந்த வைத்தது தான். இப்பொழுது அதிலும் தில்லு முல்லு பண்ணுகிறார்கள் அயோக்கியர்கள்.

நாம் கையேந்தும் வரைக்கும் தான் அவர்கள் இப்படி தில்லு முல்லு காட்டுவார்கள். நாம் விளைவித்த நம் தானியங்களை கிடங்குகளில் உள்ளே புகுந்து நாம் கைப்பற்றும் காலம் என்றைக்கு வரப்போகிறதோ?

****
காங்கிரசு அரசின் புள்ளி விவர பித்தலாட்டங்களை பதிவர் லைட்ங்க் விரிவாக பதிவு செய்துள்ளார். படியுங்கள்.
****
காங்கிரஸ் கட்சியானது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தன்னுடைய தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மாதம் ஒன்றிற்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, கிலோ 3 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது.

இப்போது ஆட்சிக்கும் வந்துவிட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணைநோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அளித்திட்ட உறுதிமொழியை நிறைவேற்றக்கோரி நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து ஆட்சியாளர்கள் இப்போது ஒரு புதிய சூழ்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு கடைப்பிடித்த தன் விளைவாக, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம்.

தேசிய மாதிரி சர்வேயானது, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைக் கணக்கிடும் முறையை மாற்றியமைத்துவிட்டது. இதன்படி, 1993-94இல் 36 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 1999-2000இல் 26.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது ஐந்தாண்டுகளுக்குள் 10 சதவீதம் குறைந்துவிட்டதாம். இது அரசாங்கம் அவிழ்த்துவிட்டுள்ள புதுச்சரடு. மக்களை எவ்வளவு ஏமாற்ற முடியும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் வேறு இருக்க முடியாது.

அரசாங்கம் அமைத்திட்ட அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழு தன்னுடைய அறிக்கையில், நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவீத மக்கள், அதாவது 83.6 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானமின்றி உழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த 20 ரூபாயில் இன்றைக்குள்ள விலைவாசி உயர்வில் என்ன செய்ய முடியும்?

பருப்பு, தானியங்கள், சமையல் எண் ணெய்கள், காய்கறிகள், அரிசி, கோதுமை என
அனைத்துப் பொருள்களின் விலைகளும் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன.

உண்மை நிலைமை இவ்வாறிருக்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறைந்துவிட்டதாக, அரசு அறிவிக்கிறது.

இவ்வாறு அரசு அறிவிப்பதற்குக் காரணம், அரசு அளித்திட இருப்பதாகக் கூறும் சுகாதார இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களையும் பெரும் பகுதி மக்கள் பெற முடியாமல் செய்வதற்கே யாகும்.

இந்தியாவில் ஏழைகளின் நிலைமை குறித்து உலக வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களில் 42 சதவீதத்தினர் உலக அளவில் கணக்கிடப்படும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாக அது குறிப்பிட்டிருக்கிறது. அதன் உலக உணவுத் திட்டத்தின்படி, உலகத்தில் பட்டினியால் வாடுவோரில் 50 சதவீதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் உடல் நலத்திற்குத் தேவையான உணவு விகிதத்தில் 80 சதவீதத்திற்கும் குறைவாகவே உண்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களில் பத்தில் ஒன்பது பேர் ஊட்டச்சத்துக் குறைவாலும், ரத்தச் சோகையாலும் பீடிக்கப்பட்டவர்கள். கர்ப்பிணிப்பெண்களின் ரத்தச்சோகையால், பிறக்கும் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் வறுமை ஒழிப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் அரசு, மேலே கூறியவாறு வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கதைவிடுகிறது.

அதுமட்டுமல்ல, முன்பெல்லாம் வறுமைக் கோட்டைக் கணக்கிடும்போது ஒரு நபர் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு 2400 ஆக இருக்க வேண்டும் என்று கணக்கிட்டு வந்தார்கள். அரசு இப்போது அதனையும் 2100 கலோரி என்று குறைத்துவிட்டது. அதாவது 2400 கலோரி உணவு உட்கொள்ள ஒருவருக்கு 567 ரூபாய் தேவைப்படும் என்றால், 2100 கலோரி உணவுக்கு 327 ரூபாய் போதுமானது. உண்மையில் இந்த 327 ரூபாய் கணக்கு என்பது 1868 கலோரி உணவுக்காகத்தான் வருகிறது.

இவ்வாறு புள்ளிவிவர பித்தலாட்டங்களைச் செய்து மக்களை ஏமாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அரசின் இத்தகைய இழிவான நடவடிக்கைகளை, ஏழை மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் தமிழக திமுக அரசு ஆதரித்து நிற்பது கேலிக் கூத்தாகும்

தொடர்புடைய பதிவுகள் :

இந்திய வளர்ச்சியின் உண்மையான நிலை - அர்ஜூன் சென்குப்தா

வறுமை கோடு என்றால்? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

நிதி நெருக்கடி : அமெரிக்காவில் 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்!

முன்குறிப்பு : நேற்று தான் 4 மாதத்தில் 32 வங்கிகள் என மே மாத இறுதி செய்தி பார்த்தோம். இப்பொழுது புதிய செய்தி 7 மாதத்தில் 64 வங்கிகள் திவால்.

***

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 64 வங்கிகள் திவாலாகியுள்ளன. சராசரியாக மாதத்துக்கு 9 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா முழுமையாகச் சிக்கித் தவிப்பதையே இது காட்டுகிறது. இதிலிருந்து மீள அமெரிக்காவிற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க வங்கிகளில் கடந்த ஆண்டே நிதி நெருக்கடி தலை தூக்கத் தொடங்கிவிட்டது. 2008-ம் ஆண்டில் 25 வங்கிகள் திவலானதாக அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை இப்போதே இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது. ஜூலை மாதத்தில் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை செக்யூரிட்டி வங்கியின் கிளைகளாகும்.

இந்த வங்கிகளின் பெரும்பாலனவைகளின் மொத்த சொத்து மதிப்புக்கும் வங்கியில் உள்ள வாடிக்காளையாளர்களின் பண இருப்புக்குமான இடைவெளி மிகவும் குறைந்துவிட்டது. இதனால் சொத்துக்களை விற்றால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியும் என்ற பரிதாப நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. கிராம அளவில் செயல்படும் வாட்டர் போர்டு கிராம வங்கியும் நிதி நெருக்கடியின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

மிகப்பெரிய வங்கிகளான சிட்டி குரூப், கோல்ட்மேன் ஆகியவை மற்றுமே கடைசி காலாண்டு முடிவில் குறைந்த அளவு லாபத்துடன் செயல்பட்டுள்ளன. வட்டார அளவில் செயல்பட்டு வந்த வங்கிகள் அனைத்தும் நிதி நெருக்கடியில் சிக்கி நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்றும், பொருளாதார நிலைமை மேலும் மோசமாக என தெரிகிறது.

நன்றி : தினமணி (26.07.2009)

July 29, 2009

நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால்!



முன்குறிப்பு : அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவது தொடர்கதையாகி வருகிறது. மாதம் ஒரு முறை இந்தந்த வங்கிகள் திவால் என செய்திகள் அறிவிக்கின்றன. இது உண்மையான திவாலா! என்பதும் முதலாளித்துவ சமுதாயத்தில் கேள்விக்குறியது. இந்த பொருளாதார மந்தத்தை பயன்படுத்தி கொண்டு, உலக முதலாளிகளிலிருந்து உள்ளூர் முதலாளிகள் வரை பல வகைகளில் நிறைய லாபம் பார்த்திருக்கிறார்கள். தொழிலாளர்களை மந்தத்தைக் காரணம் காட்டி மிரட்டி பணிய வைக்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சதியை நாம் புரிந்து கொள்ள இந்த செய்திகளை தொகுத்துப் பார்க்க வேண்டும். முதலில் செய்திகளை தொகுப்போம். பிறகு விவாதிக்கலாம்.

நியூயார்க்: 2009 புத்தாண்டு தொடங்கிய நான்கே மாதங்களில் 32 வங்கிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதாவது மாதத்துக்கு 8 வங்கிகள் என்ற விகிதத்தில் வங்கிகள் திவால் அல்லது பெரும் நஷ்டம் காரணமாக இழுத்து மூடப்பட்டுள்ளன.

s1600-h/ameican_westbank.jpg">
இந்த திவாலான வங்கிகள் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளது சில்வர்டன் வங்கி, சிட்டிஸன்ஸ் கம்யூனிட்டி வங்கி மற்றும் அமெரிக்கா வெஸ்ட் வங்கி. நேற்று முன்தினம்தான் இந்த வங்கிகள் மூடப்பட்டன.

சில்வர்டன் வங்கிக்கு 4.1 பில்லியன் டாலர் சொத்துக்களும், 3.3 பில்லியன் டாலர் வைப்புத்
தொகையும் உள்ளன. ஆனாலும் கடன் காரணமாக இந்த வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

நாடு பொருளாதார மீட்சி நிலைக்கான அறிகுறி தெரியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்காவின் நடுத்தர மற்றும் சிறிய வங்கிகள் வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு என மூடப்பட்டு வருவது அந்நாட்டு நிதித்துறையை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

2008-ம் ஆண்டிலிருந்து இததுவரை 57 வங்கிகள் அமெரிக்காவில் மூடப்பட்டுள்ளன.

நன்றி : தட்ஸ்தமிழ்

http://thatstamil.oneindia.mobi/news/2009/05/03/98821.html

July 15, 2009

லாபம் தனியார்மயம்! நஷ்டம் தேசமயம்!


நன்றி : கீற்று

முன்குறிப்பு : சில மாதங்களுக்கு முன்பு, உலக பொருளாதார மந்தம் குறித்து தொடர்கட்டுரைகள் எழுதி குருத்து -ல் வெளிவந்த பொழுது... குப்பன் யாஹூ என்பவர், ஜுன் 2009க்கு பிறகு, இந்த கட்டுரைகளைப் படித்தால், சிரிப்பு வரும் (நிலைமை சரியாகிவிடுமாம்!) என பின்னூட்டமிட்டிருந்தார். நாம் சொல்லியபடி நிலைமை சரியாகவில்லை என உலக நிலைமைகளும், இந்திய நிலைமைகளும் நிரூபிக்கின்றன. இந்த கட்டுரை அந்த உண்மைக்கு வலு சேர்க்கிறது. முதலாளித்துவத்தால் எழுந்த இந்த மாபெரும் பொருளாதார மந்தத்தின் மூலம் பெரிய பெரிய முதலாளிகள் பல்வேறு வகைகளில் இன்னும் கொழுத்த லாபம் சம்பாதித்திருக்கிறார்கள். அப்படியே நஷ்டம் எழுந்தால், அதை அரசு தலையிலும் (பெரும்பான்மை மக்கள் தலையிலும்), தொழிலாளர் தலையிலும் போட்டு தப்பித்திருக்கிருக்கிறார்கள். முதலாளித்துவம் தனக்கு வந்த நெருக்கடியை கூட தமக்கு சாதகமாக பயன்படுத்திகொள்கிறது. நமக்கு இழப்பதற்கு ஏதுமில்லை. போராட்டம் தவிர நமக்கு வேறு வழியுமில்லை.

****

தென்னை மரத்தில் தேள்கடித்தால் பனைமரத்தில் நெறிகட்டுமாம் - ஜி.சேகர்

1980ல் உருவாக்கப்பட்ட ஒசூர் தொழிற் பேட்டையில் 2000 அல்லது சற்று கூடுதலான தொழிலாளர் பணிபுரியக்கூடிய அசோக் லேலண்ட், டிவிஎஸ், பிரிமியர் மில்ஸ், டைட்டான் போன்ற பெரிய நிறுவனங்களும், அவற்றை நம்பி 200 - 500 பேர்வரை பணி புரியக்கூடிய ஏராளமான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் உருவாகின.

மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை யால் 1990 முதல் 2000க்குள் 135க்கும் மேற் பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டன. லட்சத்திற்கும் மேலான நிரந்தரத் தொழிலாளர்கள் வேலையிலிருந்து துரத்தப்பட்டனர். மத்திய அரசின் இறக்குமதி கொள்கையால் உற்பத்தியில் மற்றநாடுகளுடன் போட்டியிடவும் வியாபாரம் செய்யவும் முடியவில்லை என்று நிர்வாகங்கள் கூறின.

முழுமையாக காசுவல் (Casual), காண்ட்ராக்ட்மயம், தொழிலாளர் சட்டங்களான -குறைந்தபட்ச ஊதிய சட்டம்- சம்பள பட்டுவாடா சட்டம்- தொழில் தாவா சட்டம்- காண்ட்ராக்ட் தொழிலாளர் சட்டம் போன்றவற்றை மாற்றியமைக் கும் இரண்டாம் தலைமுறை சீர்த்திருத்தங்களை நிர்வாக மற்றும் சித்தாந்தரீதியாக மத்தியஅரசு அமல்படுத்தியது.

2005 முதல் சில புதிய தொழிற்சாலைகள் சிப்காட் பகுதிக்கு வந்திருந்தாலும், வேலை வாய்ப்பு சில நூறு பேருக்குதான். அவர்களிலும் பெரும்பாலோர் காண்ட்ராக்ட்தான். தொழிலாளரை சப்ளை செய்ய சட்டரீதியாக பதிவு செய்த 135 ஏஜன்சிகள் ஒசூரில் உள்ளன. இதுதவிர சட்டத்தை ஏமாற்றி தொழிலாளர் துறைக்கு தெரிந்தே நூற்றுக்கு மேற்பட்ட காண்ட்ராக்ட் ஏஜண்டுகளும் உள்ளனர். டிப்ளமோ, இன்ஜினி யரிங் படித்தவர்கள்கூட இந்த ஏஜெண்ட்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். கடந்தகாலங்களில் தோட்ட பராமரிப்பு, செக்யூ ரிட்டி போன்ற வேலைகளுக்கு மட்டும் பயன் படுத்தப்பட்ட காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் இன்று நேரடியாக மிஷினை ஓட்டுவது உள்ளிட்ட உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

ராஜ்ஸ்ரீயா கிளையன்றில் வேலைக்கு சேர்ந்து ஆறு மாதமேயான ஒரு பெண்ணை ஆபத்தான, பாதுகாப்பற்ற இயந்திரத்தை ஓட்ட வைத்துள்ளனர். விளைவு, 3 மாதங்களுக்கு முன் மிஷின் வெடித்து அந்த விதவை உயிரிழந் தார். டிடிகே உள்ளிட்ட சில கம்பெனி தொழி லாளர்கள்
அந்த தொழிற்சாலைக்கு முன் பிணத்தைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தும் பலனில்லை. அவரது இரு குழந்தைகளுக்கும் நிவாரணம் தர மறுத்துவிட்டது நிர்வாகம். மருத்துவத்திற்கு லட்சம் வரை செலவழித்த தாகவும் அதற்கு மேல் முடியாதென்றும் கூறிவிட்டது.

இப்படி ஆபத்தோடும், பாதுகாப்பற்ற சூழலிலும், சட்டப் பாதுகாப்பு இல்லாமலும் மிகக் குறைந்த ஊதியத்தில் முன் அனுபவம் இல்லாத ஒரு லட்சம் கிராமத்து வாலிபர்கள், வெளி மாநிலத்தவர்கள் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக ஒசூர் பகுதியில் உள்ளனர். இதுபோன்று விபத்துகளில் பலியான 50க்கும் மேற்பட்டோர் அநாதைப் பிணங்களைப் போல் அடக்கம் செய்யப்படுகின்றனர்.

பாகலூர் பிரிமியர் மில்லில் 1200 நிரந்தரத் தொழிலாளர்கள் 2000த்தில் வேலை செய்து வந்தனர். தற்போது அவ்வளவு பேரையும் துரத்திவிட்டு சட்டத்திற்குப் புறம்பாக மூன் றாண்டு ஒப்பந்த தினக்கூலியாக சுமார் 1000 பெண்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். கைதிகளைப்போல் மில்லுக்குள்ளேயே தங்க வைக்கப்படும் இவர்கள், 3 ஆண்டுகளுக்குப் பின் ரூ.35000 கொடுத்து வேலையைவிட்டு அனுப்பப்படுகிறார்கள். திருமண வயது வந்து வசதியற்ற ஏழைப்பெண்களை குறிவைத்து அவர்களது தாய் தந்தைக்கு ஆசைகாட்டி வேலைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். பணிக்காலத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதனை காரணம் காட்டி ரூ.35ஆயிரத்தை பிடித்துக் கொள்ளும் கொடுமையும் நடக்கிறது. இதே பகுதியிலுள்ள ஏசியன் பேரிங் தொழிற் சாலையில் 700பேர்வரை பணி புரிந்துவந்தனர். மூடப்பட்டு இரண்டு வருடங்களாகிறது.

வறுமையால் பலர் தற்கொலை செய்து கொண்டனர். உளைச்சலில் ஹார்ட் அட்டாக்கிலும், பழக்கமில்லாத கட்டிட வேலைக்கு சென்று விழுந்தும் இறந்தவர்களை சேர்த்தால் 50பேர் வரை இருக்கும். இந்தச் சூழலில் தற்போதைய அமெரிக்க நெருக்கடியை காரணம் காட்டி தொழிலாளர் வாழ்வு சூறையாடப்படுகிறது.

2007-08ல் லேலண்டின் மொத்த வண்டி (சேசிஸ்) உற்பத்தி 84,006. இதில் உள்ளூர்
மார்க்கெட்டில் விற்பனை 76,023. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வெறும் 7,686 வண்டிகள். 2008-09ல் 48,483 வண்டிகள். இதில் உள்ளூரில் 40,536, வெளிநாடுகளுக்கு வெறும் 5,565 வண்டிகள். அதுவும் சிலோன், பங்களா தேஷ், துபாய், ஓமன், தான்சானியா, நைஜீரியா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்குதான் ஏற்று மதி. இதில் அமெரிக்கா இல்லை. எனில், அமெரிக்க நெருக்கடியை காரணம் காட்டுவதன் நோக்கம் என்ன? சுமார் 85% விற்பனை இந்தியாவிற்குள்ளேயே இருக்கும் போது நெருக்கடி எப்படி வரும்?

25 ஆண்டுகாலமாக பல்லாயிரம் கோடி லாபம் சம்பாதித்த மல்டிநேஷனல் நிறுவனம் லேலண்ட். 2008 செப்டம்பர் முதல்தான்- அதுவும் கடந்த ஆறுமாதமாகதான் பொருளா தார நெருக்கடி தீவிரமடைந்தது. எனில் இதுவரை சம்பா தித்த லாபம் எங்கே? இந்த நெருக்கடியை நிர்வாகம் ஏற்க முடியாதா? கிடைக்கும் தகவல்கள், லேலண்ட் நிர்வாகம் தொழிலாளர்களை பட்டினிப் போட்டு அவர்களாகவே வேலையைவிட்டு ஓடும் நிலையை உருவாக்குகிறதோ என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.

லேலண்டைப் போல டிவிஎஸ்சும் நெருக்கடியைக் காட்டி அப்ரண்டீஸ், தினக்கூலி, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் சிலநூறு பேரை நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பியுள்ளது. நிரந்தரத் தொழிலாளர்கள் சுமார் 300பேர் வரை கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது,முதலாளிகள் லாபத்தை தனியார்மயமாக்குகிறார்கள், நஷ்டத்தை தேசவுடமை யாக்குகிறார்கள் என்றே தோன்றுகிறது நமக்கு.

பெரும்பாலான மற்ற தொழிற்சாலைகளில் புதிய ஊதிய ஒப்பந்தங்கள் போடப்படவில்லை. பழைய ஊதிய விகிதங் களே தொடருகிறது. பதவி உயர்வு- பணி நிரந்தரம்- பெற்று வந்த சலுகைகள்- பறிப்பு, சம்பள வெட்டு உட்பட வெளி உலகுக்கு தெரியாமல் ரகசியமாக அமுலாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நிலையோ பரிதாபம். எதிர்க்கவும் முடி யவில்லை, ஏற்கவும் மனமில்லை. பொதுவாக எதிர்கால வாழ்க்கை அவர்களை மிகவும் பயமுறுத்துகிறது.

சிறு, குறுந்தொழில்கள் :

ஒசூர் பகுதியில் சுமார் 1500 சிறுகுறுதொழிற்பட்டறைகள் உள்ளன. இதில் நிரந்தரத் தொழிலாளர் 20 % என்றால் 80% காண்ட்ராக்ட். அதில் சரிபாதி இந்தி, அசாம் மொழி பேசக் கூடிய வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்.

லேலண்ட், டிவிஎஸ் கம்பெனியின் ஆர்டர்களை நம்பி 80% தொழிற்சாலைகள் சிப்காட் பகுதியில் உள்ளன. தற்போது நெருக்கடி காரணமாக சுமார் 1000த்துக்கும் மேற்பட்ட பட்டறைகள் மூடப்பட்டு 50 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சொந்த பணத்தையும் வங்கிக் கடனையும் கொண்டு ராஜேஸ்வரி லே அவுட், சிப்காட், சிட்கோ பகுதிகளில் சிறுதொழில் நடத்தக்கூடிய அனேகர் இப்போது கடனுடன் வீதியில் நிற்கின்றனர்.

ஆனால் தொழில் நடந்தபோது மத்திய அரசுக்கு கலால் வரி யாக 2006-07ல் ரூ1661கோடி. 2007-08ல் ரூ.1330 கோடி கட்டப்பட்டுள்ளது. மாநில அரசுக்கும் 200கோடி வரியாக கட்டப்பட்டுள்ளது.ஒசூர் சிறுதொழில் முனைவோர் அமைப்பான ஹோஸ்டியா பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால் மத்திய நிதி மந்திரி, ரிலையன்ஸ் அம்பானியின் குடும்பத்தில் சண்டை என்றதும் உண்ணா மல் உறங்காமல் உடம்பும் மனமும் பதற ஓடிவந்து தீர்த்து வைத்துள்ளார். இது அவரின் வர்க்கப் பாசம். மந்திரியாக ஆக்கப்பட்டதற்கு நன்றிக்கடன் செலுத்தியுள்ளார்.

ஒசூரில் தொழில் வளர்ந்தபோது, ஓட்டல்கள், வியபார நிறுவனங்கள், சாலைகள், கட்டிடங்கள், புதிய புதிய குடியி ருப்புகள், நிலங்களின் விலை உயர்ந்தது. நகரம் வளர்ந்தது. அப்போது ஒசூருக்கு அடிக்கடி வந்த மந்திரிகள் இப்போது ஏற்றப்பட்டுள்ள நெருக்கடிக்கு ஆறுதல் கூற, புதிய வழி காட்ட வருவதில்லை. ஒசூர் நகரம் வளர்ந்த சூழ்நிலைக்கு ஈடாக வளராதவர்கள், வறுமை, கடன்பிடியில் உள்ளவர்கள் எதிர்கால வாழ்க்கையை நினைத்து பயந்து வாழ்பவர்கள் ஒசூர் தொழிலாளர்களே. மேற்கண்ட நெருக்கடியிலிருந்து நிர்வாகங்கள் மீண்டுவிடும். உண்மையிலேயே நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் சில மாதங்களிலேயே சம்பாதித்து விடுவார்கள். ஆனால் தொழிலாளர்கள் இழந்த சம்பளம், அதனால் ஏற்பட்டுள்ள புதிய கடன் ... அதை அடைக்க அவர்கள் பல வருடங்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

சுதந்திர வர்த்தக முதலாளித்துவமுறை உணர்வற்றதாகவும் இதயமற்றதாகவும் மாறிவிட்டது. அது மனிதாபிமானத்தை யும், மதிப்புமிக்கத்தன்மைகளையும் இழந்துவிட்டது. சுதந்திர வர்த்தக முதலாளித்துவ முறையில் இயங்கும் இந்த அமைப்பின் மனித முகமூடியை கழற்றிவிட்டால் அது பயங்கரவாதத்தைப் போன்றே குரூரமானது, சுயநல நோக்க முடையது என்பது வெட்ட வெளிச்சமாகும். இத்தகைய சுதந்திரம் நீடிப்பதை அனுமதிக்கக்கூடாது என ஒசூர் பகுதி தொழிலாளர்களும் குறு,சிறுதொழில் முனைவோர்களும் களமிறங்குவது தவிர்க்க முடியாதது.***

ஆறு மாதங்களாக லேலண்ட் நிறுவனம்

மாதத்திற்கு 12 நாட்கள்தான் வேலையென்று உற்பத்தி குறைப்பு செய்து வருகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்சென்டிவ் இழப்பு மட்டும் மாதம் ரூ.4000.(சம்பள இழப்பு பிற்பாடு தெரியும்). வீட்டுக்கடன், வங்கிக்கடன், சொஸைட்டிக்கடன், கல்விக்கடன் என்று பல கடன்களில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் ஜீரோ வாகிவிட்டது. ஒசூர்-1 லேலண்ட்டில் பணிபுரியும் 2300 பேரில் ஏறக் குறைய 900 தொழிலாளர்கள் ஜீரோவில் இருந்து வருகின்றனர்.

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பாவில் மந்தம், இந்தியா விலும் வாகனச்சந்தை சரிவு என்று லேலண்ட் நிர்வாகம், தொழிலாளர் களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 18மாத காலமாக இழுத்தடித்து வருகிறது. ஆட்குறைப்புக்கான ஒப்பந்தம் போட அது பார்க்கிறது. மந்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நிர்வாகம் 2008-2009 ஆண்டு 150கோடி ரூபாய்க்கு மேல் லாபமடைந்துள்ளது.

பணி முடிந்து வீடு திரும்புகிறார் தொழிலாளி. வீட்டுக்குள் கனத்த அமைதி. சில மாதங்களாக வீடு இப்படித்தான் இருக்கிறது. சமையலறை யில் மனைவி இருக்கும் சத்தம் கேட்டது. பாத்திரங்கள் உருட்டும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு அறையில் இரண்டு மகள்களும் படித்துக்கொண்டிருக்கும் அல்லது மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் முணுமுணுப்பு. வீட்டுக்குள் இவர் வந்ததற்கான எந்த அசைவுகளும் இல்லை. சீருடையைக் கழற்றாமல் ஹாலிலுள்ள சோபா வில் அமர்ந்து சிறிதுநேரம் விட்டத்தை வெறித்தபடி இருக்கிறார். மெல்ல ரிமோட்டை எடுத்து டி.வியை உயிர்ப்பிக்கிறார். உடனடியாக அவரின் மனைவி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.

“டி.வியை ஆஃப் பண்ணுங்க, பசங்களுக்கு பரிட்சை, படிக்கறாங்கல்ல” என்றாள். இவர் நிமிர்ந்து மனைவியைப் பார்கிறார். ஒரு நொடிதான், டி.வி. ரிமோட்டை ஓங்கி சுவரில் எறிகிறார். அது தூள்தூளாகிறது.

“ச்சே, கம்பெனியிலும் நிம்மதியில்ல, வீட்லயும் நிம்மதியில்ல” என்று கைகளால் தன் தலையில் அறைந்தபடி பெருங்குரலெடுத்து அழுகிறார். கணவனின் செய்கையில் அதிர்ந்து போய் நிற்கிறார் மனைவி. அறையில் படித்து கொண்டிருந்த பிள்ளைகள் ஓடிவந்து அப்பனின் கோலத்தை பார்த்து பயந்து அம்மாவை கட்டிக்கொண்டு அழுகின்றனர். அவளும் அழுகிறாள்.

இரவெல்லாம் கண்விழித்து யோசித்து இறுதியாக அவர் முடிவு எடுத்தி ருந்தார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக. மூன்று நபர்களுக்கு அந்த முடிவை கடிதங்களாக எழுதி சேர்ப்பித்தார். 1.சங்கத் தலைவர், செயலாளர், 2.நிறுவனத்தின் பர்சனல் மானேஜர், 3.வைப்புநிதி காப்பாளர் (றிதி ஜிக்ஷீustமீமீ): இந்நிறுவனம் இனி தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றப் போவதில்லையென்றும், ஒன்றரை ஆண்டாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடாமல் சங்கம் கையாலாகாதி ருப்பதாகவும், தான் மிகவும் கடனாளியாகிவிட்டதாகவும், இனி யாரிட மும் கேட்க முடியாதென்றும், மகளின் கல்லூரிக் கட்டணத்திற்கும் அன் றாட குடும்ப செலவுகளுக்கும் பணமில்லாமல் தான் துன்புறுவதாகவும் ஆகவே தன் வைப்புநிதியை தனக்கு தந்துவிடுமாறும், அது ஒன்றே ஜீவாதாரம் என்றும் மறுத்தீர்களென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் இருந்தது கடிதத்தில். பின் அவர் சமாதானப்படுத்தி வைக்கப்படுகிறார்.

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்துக் கொடுத்தது போதாதென்று அவ்வப்போது ஐடியாக்களையும் அள்ளி வழங்கி நிறுவனத்தால் பாராட்டப்பட்ட தொழிலாளி நிறுவனத்திடம் பல பட்டயங்களையும், பரிசுகளையும் வாங்கியவர். ஒருநாள் திடீரென்று தான் கடனாளியென் றும், சம்பளக் குறைவும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடாமல் நிறுவனம் இழுத்தடிப்பதாலும் இனி வாழ வழியில்லை என்றும் தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாகவும் நிர்வாக மேலதிகாரியிடம் கடிதம் கொடுத்தார். நிறுவனம் அவரைக் கூப்பிட்டு கவுன்சிலிங் செய்து இன்னும் ஆறு மாதகாலம் பொறுத்துக்கொள்ளும்படியும், பிறகு நிலமை சீரடையுமென்றும் கூறி அவரது சாவை ஆறுமாதம் தள்ளி போட்டுள்ளது.

நிறுவனத்தில் தொழிலாளிகள் ஓய்வெடுக்கும் பகுதியாக லாக்கர் ரூம் என்ற கட்டிடம் உண்டு. அதன் உத்திரத்தில் சில மின்விசிறிகளும் உண்டு. ஒருநாள் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு தொழிலாளி இயந்தி ரத்தை நிறுத்திவிட்டு லாக்கர் ரூமுக்கு செல்கிறார். ஒரு மின்விசிறியை தேர்ந்தெடுத்து கயிறை மாட்டும்போது அங்கே வந்த ஒருவரால் கையும் கயிறுமாக மாட்டிக் கொள்கிறார். பிறகு சத்தம்போட்டு சங்க நிர்வாகி ஓடி வந்து.... செக்யூரிட்டி ஓடி வந்து...

பின்குறிப்பு- பின்னர் நிர்வாகம் ஆழ்ந்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது. இதற்கெல்லாம் காரணம் மின்விசிறிதானென்று. லாக்கர் ரூமில் உள்ள அனைத்து மின்விசிறிகளையும் கழட்டிவிட முடிவெடுத்தது. நிர்வாகம் மின் விசிறிகளை கழற்றிக் கொண்டிருக்கும்போது சங்கம் கடுமையாக தனது ஆட்சேபத்தை தெரிவித்தது. நிர்வாகம் கழட்டுவதை நிப்பாட்டியுள்ளது. பின் யாரொருவர் லாக்கர் ரூம் சென்றாலும் கண்காணிக்க ஆள் போட்டுள்ளது.

தூக்கமில்லாமல் இரவு 11மணிக்கு மேல் குடியிருப்புப் பகுதியில் யாருமற்ற தெருக்களில், யாராவது அலைந்து கொண்டிருந்தாலோ, கரிய இருட்டு இடுக்குகளில் அமர்ந்திருந்தாலோ, தெரு கரண்ட் கம்பத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாலோ, தனக்குள் பேசியபடி செல்லும் ஒருவரை நீங்கள் காண நேர்ந்தால் அவர் லேலண்ட் தொழிலாளியாக தான் இருப்பார்.

- என்.கோபால்

July 11, 2009

விசாரணை கைதிகள் - சிறையில் சமையல்காரர்கள்!


மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சகோதர அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் "சிறையில் விசாரணை கைதிகள்" பற்றி ஒரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

"விருத்தாச்சலம் தாலூகா சட்டப்பணிகள் குழுத் தலைவரின் உத்தரவுப்படி, அங்குள்ள கிளைச் சிறையில் விசாரணை செய்தேன். விசாரணை கைதிகளிடம் விசாரணை நடத்தினேன். அப்பொது, அந்தக் கிளை சிறையில் உள்ள அனைத்துக் கைதிகளுக்காகவும், சில விசாரணை கைதிகள் சமையல் செய்வது தெரிய வந்தது. விருத்தாச்சலம் கிளைச் சிறையில் சமையல் செய்வதற்கு ஆட்கள் இல்லை. அவர்களே சமையல் செய்து சாப்பிடுகின்றனர். இது குறித்து விசாரித்த பொழுது, தமிழகத்தின் அனைத்து கிளைச் சிறைகளிலும் இதே நிலைமை தான் உள்ளது என தெரிய வந்தது. இது குறித்து அறிக்கை தயாரித்து சட்டப்பணிகள் குழுவின் தலைவரிடம் அளித்தேன். என் மனு உள்துறைத் செயலருக்கும் அனுப்பப்பட்டது"

சிறை கூடுதல் டி.ஜி.பி.யிடம் இருந்து இதற்கு பதில் வந்துள்ளது.

"கிளைச் சிறையில் 116 சமையல்காரர்கள் நியமிக்க அதற்கான கோப்பு உள்துறைச் செயலரிடம் நிலுவையில் உள்ளது. அவர் உத்தரவு பிறப்பித்த உடன் சமையல்காரர் நியமிக்கப்படுவர்"

மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"கிளைச் சிறைகளில் தற்காலிக சமையல்காரர்களைக் கூட நியமிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சிறைக்கைதிகளின் வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது. எனவே சிறை நடவடிக்கைகளில் விசாரணைக் கைதிகளை ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும். என் மனுவை பைசல் செய்ய உடனே செயலருக்கு உத்தரவிட வேண்டும். "

இதை விசாரித்த நீதிபதி பாஷா இதற்கான பதிலை "எட்டு வாரங்களில் அரசு பரிசீலித்து உத்தரவிட வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பின்குறிப்பு : சிறை திருந்துவதற்கான இடம் என ஏட்டுளவில் இருக்கிறது. ஆனால், கஞ்சா போன்ற போதை வஸ்துகள், மற்றும் செல்போன் என காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கக்கூடிய இடங்களாக சிறைகளாக இருக்கின்றன. இது குறித்து சமீபத்தில் சட்டமன்றத்தில் விவாதத்துக்கும் வந்தது. ஆனால், மக்கள் நலம் நாடும் அரசு என்றால், சரியாக நடக்கும். இது தான் அராஜக அரசு ஆயிற்றே! சிறையில் தான் எல்லா அராஜகங்களூம், அட்டூழியங்களும் நடக்கின்றன. தோழர் ராஜூ விசாரணை கைதிகளை தொல்லைப்படுத்தும் வேலைகளிலிருந்து விடுபட வைக்க முயல்கிறார். பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று?

நன்றி : மாலைமலர் (10/07/2009), தினமலர் (11/07/2009)

July 4, 2009

இ.எஸ்.ஐ. இரண்டு மனைவிகள் இருந்தாலும் பாதுகாப்பு தருகிறது!


செய்தி ஆச்சர்யப்படுத்துகிறதா! இதோ ஆதாரத்தை ஸ்கேன் செய்து இணைத்துள்ளேன். தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இதுநாள் வரைக்கும் ஒரு குடும்பத்திற்கு தான் மருத்துவ பாதுகாப்பு கொடுத்து வந்தது. இப்பொழுது இரண்டு குடும்பங்கள் இருந்தாலும்... பாதுகாப்பு தருகிறது. இரண்டு பொண்டாட்டிகாரர்கள் இதுவரை பட்டபாட்டுக்கு விமோசனம் கிடைத்திருக்கிறது.

நேற்று ஒரு தொழிலாளிக்காக இ.எஸ்.ஐ. கார்டு வாங்க போனால்... இப்படி கையில் தருகிறார்கள்.

ஒரு தொழிலாளி வேலைக்கு சேர்ந்து, அவரிடம் போட்டோ வாங்கி, இ.எஸ்.ஐ-யிடம் விண்ணப்பம் செய்தால்... தற்காலிகமாக மூன்று மாதம் மருத்துவம் பார்த்துகொள்வதற்கு ஒரு ஸ்லிப் தருவார்கள். இந்த ஸ்லிப்பையே "பிறகு வா! அடுத்த வாரம் வா! அவர் லீவு! இவர் லீவு" என இழுத்து இழுத்து நம் கையில் தருவதற்கு மூன்று மாதம் ஓடிவிடும். பிறகு, நிரந்தர கார்டு வாங்க விண்ணப்பித்தால்... " ஸ்கேன் ரிப்பேர், மின்சாரம் இல்லை, கையெழுத்து போட வேண்டிய மேனேஜர் விடுமுறையில் இருக்கிறார். நிறைய சேர்ந்து விட்டதால்... தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம்!" என இழு இழு என இழுத்து... நம் கையி தருவதற்குள் இரண்டு மூன்று மாதம் ஆகிவிடும்.

ஆக, ஒரு தொழிலாளி வேலைக்கு சேர்ந்தால்... இ.எஸ்.ஐ. கார்டு தருவதற்கு 6 மாதம் இழுத்துவிடுகிறார்கள். இப்படி எல்லா கூத்துகளும் முடிந்து... நம் கையில் தரும்பொழுது... பல தொழிலாளிகள் வேறு நிறுவனத்திற்கு மாறிவிடுவார்கள். இதை தான் "ஆபரேசன் வெற்றி! நோயாளி செத்துபோயிட்டான் என்பார்கள்!"

இப்படி தருகிற நிரந்தர அட்டையை தான் மேலே பார்க்கிறீர்கள். அந்த குறிப்பிட்ட தொழிலாளி ஒரு மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் ஏகபத்தினிக்காரனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு பொண்டாட்டி இரண்டு பிள்ளைகள் என தப்பாக கார்டு தருகிறார்கள். இவர்கள் கார்டு தருகிற லட்சணம் இவ்வளவு தான்!

பின்குறிப்பு : தவறுகள் சகஜம் தானே! குறிஞ்சிப்பூ பூப்பது போல எப்பொழுதாவது தவறு செய்தால்..அதை பெரிசுபடுத்துவதா! என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது! ஆணை, பெண் என போட்டுவிடுவது, குடும்பத்தினர் பெயரையே அடிக்காமல் விட்டுவிடுவது, டிஸ்பன்ஸரி பெயர் போடாமல் தருவது என கார்டுகளில் இதுவரைக்கும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். இரண்டு பொண்டாட்டி தவறு என்பது எவ்வளவு பெரிய விசயம்?! ஒரு நல்ல குடும்பத்தில் பூகம்பம் கிளம்பிவிடும் அல்லவா!

மேலும், இது ஒருவர் தயாரித்து, நேரடியாக தொழிலாளி கைக்கு வருவதில்லை. ஒருவர் தயாரித்து, ஒருவர் சோதித்து, அங்குள்ள கிளை அதிகாரி (மேனேஜர்) பச்சை மையில் கையெழுத்திட்டு தருவார்.

July 3, 2009

வட மாநில தொழிலாளர்களும், வாழ்க்கை நிலைமைகளும்!


//இது உலகமயக் காலக்கட்டம். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தைப் பாதுகாப்பதற்குப் புதிது புதிதாகச் சட்டங்கள் போடப்படுகின்றன. ஆனால், வேலை தேடி ஊரு விட்டு ஊரு செல்லும் தொழிலாளிக்கோ குறைந்தபட்ச பாதுகாப்புகூடக் கிடைப்பதில்லை. இந்த உலகமயத்திற்குச் சேவை செய்வதற்காகவே, தொழிலாளர்கள் வேலை உத்திரவாதம் பற்றிக் கேட்கக்கூடாது எனத் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இனி, தொழிலாளர்கள் பணியிடங்களில் உயிர் உத்திரவாதம் பற்றியும் கேட்கக் கூடாது என்றுகூடச் சட்டங்கள் திருத்தப்படலாம். எனவே, தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து இந்த அபாயத்திற்கு எதிராகப் போராடாவிட்டால், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவதை ஒழித்துக்கட்ட முடியாது.//

கூலித்தொழிலாளர்களை கொன்றது சுடுநெருப்பா? லாப வெறியா? என்ற கட்டுரையிலிருந்து...

புதிய ஜனநாயகம், ஜூன்’2009

வட மாநில தொழிலாளர்களும், வாழ்க்கை நிலைமைகளும்!

சமீப காலங்களில் சென்னையில் பார்க்கும் பல தொழிற்சாலைகளில் பிற மாநில தொழிலாளர்களின் முகங்கள் அதிகமாக தென்படுகின்றன. பல உணவகங்களில் அவர்கள் உணவு பரிமாறுகிறார்கள். சுத்தம் செய்கிறார்கள். சொந்த மாநிலம் எது என அவர்களிடமே கேட்டால்... பீகார், ஒரிஸ்ஸா, உத்திரபிரதேசம், நேபாளம் என்கிறார்கள்.

கடந்த வாரம் தினமலர் இதழில் இது குறித்து ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அந்த செய்தியில் இந்த தொழிலாளர்களுக்கு ரூ. 150 வரை சம்பளம் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது அதிகம். நான் செல்லும் தொழிற்சாலைகளில் தினசரி கூலி ரூ. 100 தான் கொடுக்கப்படுகிறது.

முதலாளிகளும் இவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள மிக ஆர்வமாய் இருக்கிறார்கள். காரணம் - அவர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த கூலிக்கு 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். கூடுதலாக வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வேலை செய்கிறார்கள். முக்கியமாக தொழிலாளிக்குரிய உரிமைகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள். இது போதாதா நம் முதலாளிகளுக்கு!

இந்த தொழிலாளர்களிடம் நெருங்கி விபரம் கேட்டால்.. வயது 16, 18, 20 என்கிறார்கள். கையெழுத்து போடும் அளவுக்கு இவர்களில் பலர் படித்திருக்கிறார்கள். இந்த ஒரு விசயத்திற்காக, சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் கழிந்த பிறகு, இந்தியா இப்படியொரு சாதனையை படைத்திருப்பதை பார்த்து, ஒரு "இந்தியனாக" மிகவும் நெஞ்சு நிமிர்த்தி கொள்ளலாம் நாம். இள வயதிலேயே திருமணம் முடிந்தவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என விசாரித்தால்.. சில ஆண்டுகளுக்கு முன்பு முதலில் குடிபெயர்ந்து இங்கு வேலை பார்த்த பலர் இப்பொழுது வேலை பார்ப்பதை விட்டுவிட்டு, ஊரில் உள்ளவர்களை இங்கு அழைத்துவந்து... பல நிறுவனங்களுக்கு ஆள் சப்ளை செய்து, லட்சகணக்கில் சம்பாதிக்கும் தரகனாக பரிணமித்துவிட்டார்கள்.

இவர்களைப் பற்றி... இப்படி கதைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். அதில் சில கதைகள் நெஞ்சை உருக்குபவை. வரும் நாட்களில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்தில் நாமக்கல்லில் தவிட்டிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு ஆலையில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் 17 தொழிலாளிகள் கருகி மாண்டார்கள். அதில் 16 தொழிலாளிகள் பீகார் தொழிலாளிகள். இது குறித்து விரிவாக வந்த புதிய ஜனநாயக கட்டுரையை நீங்கள் படித்திருக்க கூடும்.

இப்படி தனது சொந்த கிராமத்தை விட்டு, நாளும் இளைஞர்கள் பெரு நகரங்களை நோக்கியும், சிறு நகரங்களை நோக்கியும் வெளியேறிகொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட இந்திய ஆளும் வர்க்கத்துக்கு நேரமேயில்லை. அவர்கள் இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு எப்படியெல்லாம் விற்கலாம் என சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். வந்த உத்தரவுகளை நிறைவேற்றிவிட்டு விட்டு... தன் எஜமானமர்களிடமிருந்து வரும் அடுத்த உத்தரவுகளுக்கு ஆர்வமாய் காத்திருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில்... உத்திரபிரதேச தலித் முதல்வரான மாயாவதி.. மன்னிக்கனும் இந்திய அல்லது உலக தலித்களுக்கு தலைவரான மாயாவதி.. அரசு பணத்தில் ஆயிரம் கோடிகளில் சிலைகள் நட்டுக்கொண்டிருக்கிறார். இது ஆபாசத்தின் உச்சம்.