> குருத்து: மருந்து விற்பனை பிரதிநிதிகள் போராட்டத்தை ஆதரிப்போம்!

August 17, 2011

மருந்து விற்பனை பிரதிநிதிகள் போராட்டத்தை ஆதரிப்போம்!

இன்று நாடு முழுவதும் 1.5 லட்சம் மருந்து விற்பனை பிரதிநிதிகள் தங்களுடைய நீண்ட நாள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும், பொதுமக்களுக்கான 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் போராடுகிறார்கள்.

இந்தியாவின் மருத்துவ துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்ரமிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து, இப்பொழுது 50% -ஐ தொட்டுவிட்டதாம்!. மருந்துகளின் விலை எல்லாம் கடந்த 15 ஆண்டுகளில் 300%, 600% அதிகரித்துவிட்டது. அரசு, அரசு மருத்துவமனைகளை கண்டுகொள்ளாமல் விட்டு, ஒழித்துக்கட்ட பார்க்கிறது. வருங்காலங்களில் மருத்துவம் என்பதே தனியார் மருத்துவமனையில் பார்ப்பது என்ற அபாய நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஆகையால், உயிர்காக்கும் 356 முக்கிய மருந்துகளின் விற்பனை விலையை அரசு நிர்ணயித்து, விலை ஏறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் அடக்கம்.

பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதோடு, தொழிலாளர்களின் உரிமைகள் பலவற்றையும் மதிக்க மறுக்கிறது!

ஆகையால், மருத்துவ பிரதிநிதிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்!

http://articles.timesofindia.indiatimes.com/2011-08-12/kanpur/29879792_1_sales-representatives-association-sales-promotion-employees-act-sales-target

0 பின்னூட்டங்கள்: