> குருத்து: அணு மின்சாரத்தால் பலன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான்!

December 21, 2011

அணு மின்சாரத்தால் பலன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான்!


நேற்று தமிழகம் தழுவிய அளவில் குறுந்தொழில், சிறுதொழில், குடிசைத்தொழில், பல்வேறு தொழிற்பேட்டைகள் கதவடைப்பு, ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மின்சாரத் தடையால், பெரிய பாதிப்பு வருவதால், கூடங்குளம் அணு உலையை துவங்க சொல்லி வலியுறுத்தினார்கள்.

பத்திரிக்கைக்கான செய்தியில், மத்திய அரசு பாதுகாப்பானது என சொல்லிவிட்டதால், உடனே உற்பத்தி துவங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்கள்.

தங்களுக்கு மின்சாரம் தேவையென்றால், தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் மின்சாரம் கொடு என போராடலாம். அப்படி கோர உரிமை இருக்கிறது.

அல்லது

மின்சாரத்திற்கு எந்தவித திட்டமும் இல்லாமல், நீ வா! நீ வா! என பன்னாட்டு நிறுவனங்களை அழைத்த பொழுது, எதிர்த்திருக்கவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு, கோவையில் இதே போல் சிறுதொழிற்சாலைகளுக்கான சங்கங்கள் போராடிய பொழுது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம், சலுகை விலையில் மின்சாரம் தருவது குறித்து வெள்ளை அறிக்கை கொடு என்றார்கள். அப்படியே இப்போதும் கேட்கலாம்.

அப்படி கேட்பதில் இவர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. காரணம் இங்கு நடக்கும் உற்பத்தி எல்லாம் ஏகாதிபத்திய சேவைக்கான உற்பத்தியாய் இருக்கும் பொழுது, அவர்கள் தான் இவர்களுக்கு வேலையே தருகிறார்கள். அப்படி இருக்கையில் தங்களுக்கு வாழ்வு தருபவர்களை (!) எப்படி கேள்வி கேட்க முடியும்? அணு மின்சாரம் கிடைத்த பிறகும், நமது முதலமைச்சர்கள் நீ வா! நீ வா! என மீண்டும் அழைப்பார்கள். இவர்கள் அப்பொழுதும் வேடிக்கைத்தான் பார்ப்பார்கள்.

ஆக ஒன்று புரிகிறது. உற்பத்தியில் லாபம் பெறுவது பன்னாட்டு நிறுவனங்கள்.
கூடங்குளம் அணு உலையால் பயன் பெறப்போவதும் பன்னாட்டு நிறுவனங்கள் தான்.

http://news.chennaionline.com/chennai/Small-scale-industries-shut-shops-demanding-commissioning-of-KKNPP/6282710a-a91e-4f89-8f3d-2ab02b260d9a.col

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test