> குருத்து: மின்கட்டண உயர்வை ரத்துசெய் : ம.கஇ.க ஆர்ப்பாட்டம், ஜெ. கொடும்பாவி எரிப்பு!

April 4, 2012

மின்கட்டண உயர்வை ரத்துசெய் : ம.கஇ.க ஆர்ப்பாட்டம், ஜெ. கொடும்பாவி எரிப்பு!


மத்திய அரசும், மாநில அரசும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் மானியங்களை அள்ளி இறைத்து செல்லப்பிள்ளைகளாக நடத்துகிறார்கள். அதனால் வரும் சுமைகளை மக்கள் மீது சுமத்தி வருகிறார்கள்.

குறிப்பாக, ஜெ. பேருந்து கட்டணத்தையும், பால் விலையையும் அநியாயமாக சமீபத்தில் உயர்த்தினார். இப்பொழுது மின்சார கட்டணத்தையும் தாறுமாறாக ஏற்றியிருக்கிறார்.

இதைக் கண்டித்து, மின்சார உயர்வை ரத்துசெய்யக்கோரி சென்னை சைதையில் இன்று மாலை 4 மணியளவில் மக்கள் கலை இலக்கிய கழகமும், அதன் தோழமை அமைப்புகளும் எழுச்சியோடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஜெ.வின் கொடும்பாவி கொளுத்தினார்கள். 250 தோழர்களுக்கும் மேலாக கலந்துகொண்டார்கள். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவ வேண்டும்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

கொடும்பாவி பெருசா வேணுமே...

வலிப்போக்கன் said...

நாளைக்கு ஓட்டு வாங்குவதற்க்காக. இனி ஒவ்வொரு கட்சியா நட்த்தும்