> குருத்து: மக்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து சைதையில் ஆர்ப்பாட்டம்! 100 தோழர்கள் கைது!

September 10, 2012

மக்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து சைதையில் ஆர்ப்பாட்டம்! 100 தோழர்கள் கைது!

மக்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து சைதையில் ஆர்ப்பாட்டம்! 100 தோழர்கள் கைது!

இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும் அங்கே குவிக்கப்பட்ட உள்ள போலீசு படைகளையும் உடனே திரும்ப பெறவேண்டும்.

அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிப்பதை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்தவேண்டும்.

மக்களுக்கும் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரு நாசம் விளைவிக்கும் அணு உலைகள் இழுத்து மூடப்படவேண்டும்

இன்று மக்கள் மீது போலீசு நடத்திய கொடூர தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டை கண்டித்து, இன்று மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் 100 பேர் வரை கைதானார்கள்.

போராடும் மக்களுக்கு தோள்கொடுப்போம்! ஆபத்தான அணு உலையை இழுத்து மூடுவோம்!

1 பின்னூட்டங்கள்:

பலசரக்கு said...

ஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மத்திய அரசிடம் தமிழ் மக்களை பணயமாக வைத்து விட்டார். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களை நம்ப வைத்து கழுத்தறுப்பது நியாயமா? மனித உரிமைக்கு அர்த்தம் தெரியுமா இந்த ஆளும் "மா"க்களுக்கு?