> குருத்து: தருமபுரி : தலித் மக்கள் மீதான தாக்குதல்! - உண்மை அறியும் குழு அறிக்கை!

December 23, 2012

தருமபுரி : தலித் மக்கள் மீதான தாக்குதல்! - உண்மை அறியும் குழு அறிக்கை!

//"வீட்டுக்குள்ளாற  ரூம்ல ஒளிஞ்சிருந்தோங்க.
கொழந்தைங்க்கல்லாம்
ரெண்டுலேருந்து பத்து வயசுக்குள்ளாறதான்.
தீய கொளுத்திட்டுப் போட்டுடுப் போயிட்டாங்க.

ஒரே பொகைங்க. மூச்சு வேற அடச்சிகிச்சு.
கொழந்தை அணு தண்ணி...தண்ணின்னு கேட்டு
மயங்கிடுச்சு.  எங்களூக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல.
கத்தவும் பயமா இருந்துச்சு.

வேற வழியில்லாம மத்த குழந்தைங்கள
மூத்தரம் பேயச் சொல்லி
அதத்தாங்க குடிக்க வச்சு உசுர காப்பத்துனோம்."//

- தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி, செங்கல்மேடு ஆகிய தலித் மக்கள் வாழும் கிராமங்கள் மீது நவம்பர் 7, 2012 அன்று ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல் குறித்து, மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு அமைத்த உண்மை அறியும் குழு, நவம்பர் 8,9,10,11, 24 ஆகிய தினங்களில் அக்கிராமங்களுக்குச் சென்று மக்களிடமும் அதிகாரிகளிடமும் நேரடியாக விசாரித்து வெளியிடும் அறிக்கை .


வெளியீடு :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

நன்கொடை ரூ. 20/-

31 பக்கங்கள்.

கிடைக்குமிடம் :

அலுவலகம் :

702/5, ஜங்சன் ரோடு,
விருத்தாச்சலம்,
கடலூர் மாவட்டம் - 606 001
9443260164

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

0 பின்னூட்டங்கள்: