> குருத்து: திராவகத்தை தடை செய்! - உச்சநீதிமன்ற நீதிபதி

February 7, 2013

திராவகத்தை தடை செய்! - உச்சநீதிமன்ற நீதிபதி

பெண்கள் மீதான திராவக வீச்சு சம்பவங்கள் நிறைய நடப்பதற்கு, எளிதாக 'திராவகம்' கிடைக்கிறது. அதனால் மத்திய மாநில அரசுகள் திராவகம் விற்பனையை தடை செய்யவேண்டும் அல்லது முறைப்படுத்த வேண்டு என உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு வழக்கில் இரண்டு நாள்களுக்கு முன்பு கருத்து தெரிவித்துள்ளார்.

'சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால், திருமணத்தை நிறுத்திவிடலாம்' என்ற சொலவடை உண்டு. இந்த கருத்தை அந்த அளவுக்கு கீழிறக்க முடியாது என்றாலும், பெண்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் இப்படி பட்ட பல காரணங்களை பல சமயங்களில் பட்டியலிடுவது அயர்ச்சியை தருகிறது.

நிலவுகிற சமூக அமைப்பிற்குள்ளேயே தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைகளை இப்படிபட்ட பட்டியல் மறைமுகமாக உதவி செய்கிறது.

"நிலப்பிரத்துவ தந்தை வழி சமூக அமைப்பு, மறுகாலனியாதிக்கம் - இந்த இரண்டையும் கட்டி காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் திசையில், குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களை கட்டியமைப்பதும், இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுமே ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணிணத்துக்கு விடுதலையையும் உரிமைகளையும் பெற்றுத்தரும்' என புதிய ஜனநாயகம் இதழில் படித்தது தான் நினைவுக்கு வருகிறது.

(படத்திலிருப்பவர் : திராவக வீச்சால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் பாண்டிச்சேரி விநோதினி)

0 பின்னூட்டங்கள்: