> குருத்து: ஊத்தி சீரழிக்கிற கேடு கெட்ட அரசு!

June 14, 2013

ஊத்தி சீரழிக்கிற கேடு கெட்ட அரசு!


இரண்டு நாள்களுக்கு முன்பு, ரயிலில் வந்துகொண்டிருந்தேன். மூன்று பெண் தோழர்கள் ரயிலில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியதை உங்களுடன் பகிர்கிறேன்.

****

அன்பார்ந்த பொதுமக்களே!

நாங்கள் புரட்சிகர பெண்கள் அமைப்பான 'பெண்கள் விடுதலை முன்னணி' அமைப்பிலிருந்து வருகிறோம்.

இந்த நாட்டுல குடிமக்களுக்கு நல்ல குடிநீர் தர அரசுக்கு கவலையில்லை.  எல்லா நோயும் தண்ணியில இருந்து வருவதால், நோய்க்கு பயந்துகிட்டு, கேன் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கிறோம்!

பிள்ளைகளுக்கு கல்வி தரவேண்டியது அரசோட பொறுப்பு. தெருவுக்கு தெரு புற்றீசல் போல தனியார் பள்ளிகளை தொறக்கிறான். பல ஆயிரத்தை கட்டிட்டு, ஒரு ரசீது கூட தரமாட்டேன்கிறான்.  அரசு கல்வி கொடுக்குற பொறுப்பிலிருந்து கழண்டுகிடுச்சு!

உடம்புக்கு முடியலைன்னா அரசு மருத்துவமனை எதுவும் பக்கத்துல இல்ல!  தனியார் டாக்டரை பார்த்தா 200 ரூ. பீஸ். மருந்து மாத்திரை ரூ.200 க்கு எழுதிதர்றார். மருத்துவம் கொடுக்குற பொறுப்பும் அரசுக்கு இல்லை!

ஆனா, குடிமக்களுக்கு ஊத்திக்கொடுக்கிற வேலையை மட்டும் செய்ஞ்சா இந்த அரசு எவ்வளவு கேடு கெட்ட அரசு!

ஆக, மக்களோட அத்தனை அடிப்படை உரிமைகளையும் கண்டுக்காத அரசு ஊத்திக்கொடுக்குதுன்னா என்ன அர்த்தம்?

மக்கள் நிதானத்துல இருந்த மோசமான அரசை எதிர்த்து கேள்வி கேட்பான். தெருவுல இறங்கி போராடுவான்.  அதனால், மயக்கத்தில வைச்சிருந்தா தான் நமக்கு நல்லதுன்னு அரசு நினைக்குது!

மக்களை சீரழிக்கிற, போதையில் ஆழ்த்துகிற டாஸ்மார்க் கடைகளை இழுத்து மூடனும்!

அதற்காக போராடுகிற 'பெண்கள் விடுதலை முன்னணி' எடுத்திருக்கிற போராட்டத்தை ஆதரியுங்கள்!

1 பின்னூட்டங்கள்:

knvijayan said...

தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.