> குருத்து: நீரோ மன்னன் தமிழில் இல்லையா?

October 17, 2013

நீரோ மன்னன் தமிழில் இல்லையா?

சமீபத்தில் ஒரு வாசகர், எழுத்தாளர் ஒருவரைப் பிடி பிடியென்று பிடித்துவிட்டார்.

அவர்களுக்குள் நடந்த கடிதச் சமரில் வாசகர் தான் வெற்றி பெற்றார். அந்த எழுத்தாளர் கொடுங்கோன்மைக்கு உதாரணமாக நீரோ மன்னனைக் காட்டியிருந்தார். அவன் தாயைக் கொன்று, மனைவியைக் கொன்று சகோதரனையும் கொன்றான். கடைசியில் அரிய தத்துவ மேதையான அவனுடைய குரு சேனகாவையும் கொன்றுவிட்டான். இவன் தான் ரோம் நகரம் பற்றி எரியும்போது பிடில் வாசித்தவன்.

வாசகருக்கு பற்றிவிட்டது. கொடுங்கோல் மன்னன் என்றால் நீரோ மட்டும் தானா?

தமிழில் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள். அவர்களை சொல்லலாமே. ஏன் சங்ககாலத்தில் கூட நன்னன் என்ற மன்னன் கொடுங்கோலாட்சி செய்திருக்கிறான். நீராடப் போன பெண் நீர் இழுத்து வந்த பசுங்காயை தெரியாமல் உண்டுவிட்டாள். மன்னன் அதற்கு தண்டனை விதித்தான். அவள் இழப்பீடாக 81 யானைகளும், அவள் எடைக்கு எடை பொன்னும் தருவதாகச் சொல்லியும் மன்னன் திருப்தியடையாமல் அவளைக் கொன்றான். இவ்வளவு சிறப்பான அரசர்கள் இருந்தும் கொடுங்கோல் தன்மையில் தமிழ்நாடு குறைவானது என்று சொல்லியது இவருடைய ரத்தத்தை சூடாக்கிவிட்டது. இவருடைய தேசப்பற்றும், அதை முந்திக்கொண்டு வந்த தமிழ் பற்றும், அதை முந்திக்கொண்டு வந்த சங்கப் பாடல் பற்றும் என் பக்கத்தில் நிற்பவர் மயிரைக்கூட சிலிர்க்கவைக்கும்.

‍வாசகர் கடிதம், அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரையிலிருந்து!

0 பின்னூட்டங்கள்: