> குருத்து: இரயில் சிநேகம்!

November 22, 2013

இரயில் சிநேகம்!

தென்னிந்தியா முழுவதும் சுற்றி வந்து, இருபத்தைந்து வருடங்கள் லிப்ட் விற்பனை & சேவை பிரிவில் வேலை பார்ப்பவர் ஒருவர். 

சென்னையில் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் வேலை செய்யும் ஒருவர்,

தேசிய வங்கியில் அலுவலக உதவியாளராக  வேலை செய்து ஓய்வு பெற்ற ஒருவர். இவர்களோடு நானும் ரயிலில் பேச துவங்கும் பொழுது இரவு 10 மணி.

அதில் சில..

"இனி விவசாயத்தை நம்பாதீர்கள்.  அதிலிருந்து வெளியே வாருங்கள்" என எப்பொழுது மன்மோகன் சொன்னாரே, அப்பொழுதே வெறுத்துவிட்டேன். இந்த ஆள் மகா திருடன்! என!"

"எங்க பகுதியில் விதை கிடைக்காத பயிர்கள் பயிரிட கிடைத்த பொழுது, பதறி போய்விட்டேன்.  நிலங்களை மலடாக்குகிறார்களே!" என!

"இரவெல்லாம் முழிச்சிருந்து, அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் நமது பெண்கள் வேலை செய்கிறார்களே! அவர்களுடைய உடல் என்ன ஆகும்?"

"எங்க அம்மாவை தவிர யாரையும் நம்பமாட்டேன் சார்!"

கர்மா, பாசிட்டிவ் சிந்தனை, ஓஷோ, கம்யூனிசம் தோற்றுப்போனதா, பா.ஜனதா மாற்று இல்லை என பல தளங்களிலும், உலகம் சுற்றி வந்த பொழுது, இரவு 12.30 மணி.

நாங்கள் இருந்தது 1 முதல் 8க்குள்.  32 எண்ணுள்ள படுக்கையிலிருந்து ஒரு பெரியவர் எழுந்து வந்து, நீங்க பேசறதுல எனக்கு தூக்கம் வரல்ல! ப்ளீஸ் என்றார்.  அதற்கு பிறகும் மெதுவாக விவாதித்து தூங்கும் பொழுது இரவு 1.30 மணி.

வள!வள! என பேசிக்கொண்டிருந்த ஒருவர் தான் விவாதத்தை துவக்கி வைத்தவர்.  நான் பேசினால் பேசுகிற ஆள்!

இந்த விவாதம் பயனுள்ளதாக இருந்தது. இப்படி விவாதித்து பல மாதங்கள் ஆயிற்று! என்றார்கள் இருவர். எனக்கும் தான்!


0 பின்னூட்டங்கள்: